பல்லவி
1மானஸ ஸஞ்சரரே ராமே
சரணம்
சரணம் 1
வர முனி ப4க்த லோக சயார்யே
பரம பாவன நிர்ஜர வர்யே
2முக2 ஜித பா4ர்யே (மா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மானஸ/ ஸஞ்சர/ ரே/ ராமே/
மனமே/ நிலைப்பாய்/ ஏ/ இராமனில்/
சரணம்
சரணம் 1
வர/ முனி/ ப4க்த/ லோக சய/-ஆர்யே/
உயர்/ முனிவர்/ தொண்டர்/ உலகங்களுக்கு/ இனியோனில்/
பரம/ பாவன/ நிர்ஜர/ வர்யே/
முற்றிலும்/ தூய/ வானோரால்/ வேண்டப்படுவோனில்/
முக2/ ஜித/ ப4-/ஆர்யே/ (மா)
முகத்தோனில்/ வெல்லும்/ தாரா/ அதிபனை/ மனமே...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மானஸ ஸஞ்சரரே - சில புத்தகங்களில் இச்சொற்கள் இருமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
8 - ஹ்ரு2த்3-குமுத3 - ஹ்ரு2த3ய குமுத3.
Top
மேற்கோள்கள்
3 - மகராங்க - மீன் சின்னத்தோன் - காமன்.
5 - நக3 வைரி - மலைகளுக்கு எதிரி - இந்திரன் - வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம், முதல் அத்தியாயம் - (மைனாக மலை அனுமனுக்குக் கூறுவது) நோக்கவும்.
Top
விளக்கம்
2 - முக2 ஜித பா4ர்யே - 'பா4ர்யா' என்ற சொல்லுக்கு, 'மனைவி' என்று பொருளாகும். இதனை நேரிடையாக மொழி பெயர்த்தால், 'முக அழகினில் மனைவியையும் வெல்வோன்' என்று பொருளாகும். அத்தகைய பொருள் பொருத்தமாகப் படவில்லை. புத்தகங்களில், இதற்கு, 'முக அழகினில் மதியினை வெல்வோன்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தியாகராஜர், பல கிருதிகளில், 'மதி'யை, 'ப4 ராஜ' (ப4 - தாரை) 'தாராதிபன்' என்று குறிப்பிடுகின்றார். அவருடைய, 'மேலுகோவய்யா' என்ற பௌ4ளி ராக கிருதி நோக்கவும். எனவே, 'பா4ர்யே' என்பதனை 'ப4+ஆர்யே' (தாரைகளுக்கு இனியோன்) என்று பிரித்துப் பொருள் கொள்ளப்பட்டது.
4 - ஸு1க முக2 வினுத - சுகர் முதலானோர் போற்றுவோன். சதாசிவ ப்ரம்மேந்திரரின், 'பிப3ரே ராம ரஸம்' என்ற கீர்த்தனையினையும் நோக்கவும் - சரணம் 4 - 'ஸு1க, ஸௌ1னக, கௌஸி1க முக2 பீதம்' (சுகர், சௌனகர் மற்றும் கௌசிகர் (விசுவாமித்திரர்) ஆகியோர் பருகிய ராம நாம ரசம்).
Top
6 - து3ர்ஜன தூ3ரே - தீயோருக்குத் தூரமானவன். இறைவன் அனைத்து உயிரினங்களிலும் - நல்லவனாகிலும், தீயவனாகிலும் - உள்ளியக்கமாக உள்ளான். ஆனால், ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறுவது போன்று, எங்ஙனம் நெருப்பு, அண்டியோனுக்கு இதமளிக்கின்றதோ, அங்ஙனம், இறைவனை அண்டினால் இதம் பெறலாம்; தீயோர், இறைவனை அண்டாததனால், அவர்களுக்கு அந்த சுகம் கிடைப்பதில்லை. அவ்வகையில், 'தீயோருக்குத் தூரமானவன்' என்று பொருள். ராம கிருஷ்ண பரமஹம்ஸரின் பொன்மொழிகள் - Gospel of SrI rAmakRSNa paramahaMsa
7 - கமலாரி - கமலப் பகை - தாமரை மலர்களில் சில, பொழுது விடிய, மலரும்; பொழுது சாய, மூடிக்கொள்ளும். சில, சந்திரனைக் கண்டு மலரும்; பொழுது விடிய, மூடிக்கொள்ளும். கமலம், முதல் வகையைச் சேர்ந்தது; குமுதம், இரண்டாவது வகையினைச் சேர்ந்தது. அதனால், இடத்திற்குத் தகுந்தபடி, பகலவனையும், மதியினையும், 'குமுதப் பகை' மற்றும் 'கமலப் பகை' என்று கூறப்படும்.
Top
முற்றிலும் தூய - இறைவனைக் குறிக்கும்
தாராதிபன் - மதி
கௌசிக முனி - விசுவாமித்திரர்
இந்திரன் பகைவர் - அரக்கர்
மலரோன் - பிரமன்
பிறையணிவோன் - சிவன்
கமலா - இலக்குமி
சாகேத புரி - அயோத்தி நகர்
Top